Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
மயிலாடுதுறை பெருமை “
மயிலாடுதுறை பெருமை “
கரவு இன்றி நன்மாமலர் கொண்டே
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வரமா மயிலாடுதுறையே.
விளக்கம்:
மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை
உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை
நெஞ்சில் வஞ்சம் இல்லாது மணம் வீசும் மலர் ஆகிய தம் கண் மலரில் வீற்றிருக்கும் திருவடியை இணைத்து சதா காலமும் தவம் இயற்றும் இடம் தான் செம்மை ஸ்தானம் ( செந்தூர் – திருச்செந்தார் – முருகன் ) ஆகிய நெற்றிக்கண் – சுழிமுனை தான் சிவம் வீற்றிருக்கும் நல்ல இடமாகும்
அதாவது சுழி உச்சி தான் சிவத்தின் இருப்பிடம் என்றவாறு
அந்த இடம் நோக்கி ஞானியர் தவம் செய்வர் என்ற கருத்து
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.