Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் - 6
சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் - 6
ஓளியாக்கனல் : மூலாக்கினி
இரு திருவடிகளின் இணைப்பினால் நெற்றியில் தோன்றிடும் ஒரு வகையான அக்கினி
மூலம் தொடங்கி சுழிமுனை வரை ஓங்கி வளர்ந்து மலங்களையும் வினைகளயும் அழிக்க வல்லது
அருளைக் கொடுக்கின்ற ஒளி
இது தோன்ற , விந்து பர விந்துவாக மாறும்
2 வேகாக்கால் : அமுதக் காற்று – இறைச் சுவாசம் – Cosmic breath – Cosmic Prana – Gods breath etc
பிராணன் – காரணக் காற்று
முதலில் சூரியகலை – சந்திர ( வாசி ) கலையாக மாற்றம் பெறும். நாதம் உண்டாகும் . பரவிந்து வாசியுடன் கூடி சுழிமுனை வழியாக மேலேறி , பிரமப்புழை திறக்கப்பட்டு, துவாதசாந்தப் பெருவெளி அடையும்.
முழு நிலவு உருவாகும் – அதிலிருந்து குளிர்ந்த காற்று வீசும். இது சாகாக்கலை – அமுதக்கலை , இறைச்சுவாசம்
பசி தூக்கம் போகும், உடல் லேசாக , தக்கையாக இருக்கும் , உடல் மிதக்கும் .
3. போகாப்புனல் : அமுதம் ( அமுதமாகிய மாறிய விந்து )
பூரண சந்திரனிலிருந்து குளிர்ச்சியான அமுதம் இறங்கும். அருளமுதம்
மூன்று உளுந்து பிரமாணமுள்ள அமுதம் இறங்கும். இதுவே சுத்த கங்கை – ஆகாய கங்கை
4 சாகாத்தலை : சுத்த ஆகாயம்
பரவிந்துவினால் எல்லா மலங்களும் எரிந்து நாசமானபின் , ஆகாய பாகம் சுத்தம் ஆன பின் உருவாவது
சுத்த காற்று - சுத்த நீர் - சுத்த ஆகாயம் தான் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்
விளக்கம் ஆம் சுருக்கமாக சொல்லில்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.