ஊனக் கண்ணும் ஞானக் கண்ணும்
ஊனக் கண் கொண்டு
பூத வெளி தான் காண முடியும்
அதே சமயம்
அறிவாகிய ஞானக் கண் நெற்றிக்கண் கொண்டு தான்
ஞானப் பெரு வெளியாம் சிதாகாயம் சிதம்பரம் காண முடியும்
முன்னது ஜடம்
பின்னது அறிவு மயம்
அதனால்
அறிவு அறிவை அறியுது
இதைத்தான் குறள்
நுண்மாண் நுழைபுலம் என்கிறது
அதாவது சிற்றம்பல வெளியை நுண்ணறிவு உடை ஞான நெற்றிக்கண்ணால் தான் கண்டு உள் நுழையவும் முடியும் என்கிறது
இதை நம் ஊனக்கண்ணால் காண முடியாது
என்கிறது குறள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.