Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
தருமச்சாலை - சன்மார்க்க விளக்கம் "
தருமச்சாலை - சன்மார்க்க விளக்கம் "
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 71
காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் " தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே "
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே
பொருள் :
” ஒருமை எனும் தவத்தால் ” கிடைக்கும் பெரும் பயனே
” சோறு மட்டும் போடும் சன்மார்க்கத்தார் கவனிக்க :
தவம் தவம் என தான் கூறியுள்ளார் – ஜீவகாருண்யம் – தயவு என கூறவிலை ”
"எல்லாம் அருளும் அளிக்கும் ஆன்ம நிலையாகிய தருமச்சாலையில் " எனக்கு எல்லாம் தந்த அளித்த தனித்தலைவா
தரும சாலை - ஆன்ம நிலையே அன்றி சோறு போடும் அன்னதானச் சத்திரம் - அன்னதானக்கூடம் அல்ல என்பதை எல்லா சன்மார்க்கத்தாரும் அறிந்து உணர வேண்டும்
ஆன்ம நிலையே எல்லாம் தங்கு தடையின்றி வழங்கும் என்பதால் வள்ளல் எப்போதும் அது அன்னம் வழங்கும் அன்னதானச்சாலை - சத்திரம் ஆக மாற்றி உலகுக்கு காட்டினார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.