Monday, April 27, 2026

அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம் மனிதராகிய நாம் வாழ்வதும் எல்லா செயலையும் ஆற்றுவது வெளியில் தான் அதே போல் நம்மை ஆட்டிப்படைக்கும் தத்துவங்களும் இருப்பது வெளியிலும் தான் அவைகள் தத்துவ வெளிகள் ஆம் தத்துவங்கள் 36 ஆன்ம தத்துவம் – 24 வித்யா 7 சிவ தத்துவம் 5 மொத்தம் 36 இவைகள் எங்கெங்கு உள என விளக்கும் அகவல் வரிகள் 1 மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 573 - 574 இதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம் உயிர் வெளியில் வகுத்து வைத்துள்ளதாம் அபெ ஜோதி 2 காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 575 -576 இந்த வரியில் வித்தியா தத்துவங்கள் எலாம் கலைவெளியில் வகுத்து வைத்துளதாம் அபெஜோதி 3 துரிசறு கருவிகள் சுத்த நல் வெளியிடை அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 577 -578 சுத்த தத்துவங்கள் ஆகிய சிவ தத்துவங்களை சுத்த நல் வெளியில் அபெஜோதி வைத்து வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார் வள்ளல் பெருமான் எல்லாம் வெளியில் தோன்றி அங்கேயே ஆட்சி செய்தும் முடிவில் முடியும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.