Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 19 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 19 விளக்கம் தனக்கு நிகரிங்கு இல்லாதுயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே கனக்க திகைப்புற் ரங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கி தூக்கி வைத்தாய் நிலை பொருந்தவே ( பாடல் 1 ) இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போக போக நூலின் தரத்தில் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போதெல்லாம் நடுக்கம் நீக்கியே அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே ( பாடல் 2 ) தனக்கு நிகரிங்கு இல்லாதுயர்ந்த தம்பம் ஒன்றதே இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் = இவைகள் யாவும் குறிப்பிடும் உறுப்பு ஒன்று தான் – அது சுழிமுனை நாடி ஆகும் ஏறிப் போக போக நூலின் தரத்தில் நுணுகவே – அன்னாடியானது மேலே செல்ல செல்ல நூலைப் போல மெலிதாகி கொண்டே போகின்றதாம் கனக்க திகைப்புற் ரங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கி தூக்கி வைத்தாய் நிலை பொருந்தவே – சுழிமுனை நாடியில் உள்ளே செல்ல , இதென்ன என பயத்தால் திகைத்து கலங்கிய போது – அக்கலக்கமெல்லாம் நீக்கி பிரமரந்திரம் என்னும் சுழிமுனையில் நிலை நிறுத்தினாய் திரண்ட கருத்து : சுழிமுனை நாடி நூல் இழைப் போல மெலிதாகி கொண்டே போகும் தன்மை உடையது – அதனுள் செல்ல , அதனால் வரும் பயத்தால் கலங்கி வருந்திய போது , அருள் அந்த கலக்கமெல்லாம் நீக்கி அவ்வனுபவத்தைக் கூட வைத்து , பிரமரந்திரத்தில் நிலை நிறுத்தியது என்று தன் அனுபவத்தை இங்கே உரைக்கின்றார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.