Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 18 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 18 விளக்கம்
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமமதாயிற்றே
சகத்தில் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே
ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன்
எந்தாய் கருணை அமுதுண்டு இன்பப் பொருப்பில் ஒண்கினேன் ( பாடல் 63 )
உறவு பகை இரண்டும் எனக்கிங்க் ஒன்றதாயிற்றே
ஒன்றென்று இரண்டென்று உளரும் பேதம் ஓடிப் போயிற்றே
மறவு நினைவு என்றென்னை வலித்த வலிப்பு நீங்கினேன்
மன்றில் பரமானந்த நடங்கண்டு இன்பம் ஓங்கினேன் ( பாடல் 64 )
முன்னமே உரைத்தபடி மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவம் குறித்த பாடல்களாகும்
ஆன்ம நிலை என்பது தனித்த = ஒன்று – ஏக நிலை
ஆன்மா – தனிக்குமரி – எந்த தத்துவங்களுடன் சேராமல் தனித்து நிற்கும்
ஆன்மா – ஒருமை நிலையில் விளங்குவது – இருமை ஆகிய இரவு – பகல் , வெற்றி – தோல்வி , நல்லது – கெட்டது என்பது கிடையவே கிடையாது
அந்த ஆன்ம அனுபவங்களைத் தான் இந்த பாடல்களில் தான் அடைந்ததை விளக்குகின்றார்
இருமைகளாகிய
1 தாங்கல் விடுதல்
2 உறவு பகை
3 மறப்பு நினைப்பு
4 உற்சாகம் சலிப்பு எல்லாம் ஆன்ம நிலையில் போயொழிந்தது என்று தன் அனுபவத்தை பகிர்கின்றார்
ஒன்றென்று இரண்டென்று உளரும் – தெய்வம் ஒன்று இரண்டு என்ற பேதம் போயொழிந்தது
திரண்ட கருத்து :
ஆன்ம நிலையில் இருமைகள் என்னும் இருள் போயொழிந்து ஒருமை நிலை ஓங்கியது என்று பாடுகின்றார்
மன்றில் ஆன்ம அனுபவம் – அசைவும் கண்டு பரமானந்தம் கொண்டேன் என்று பாடுகின்றார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.