Tuesday, April 7, 2026

ஆடிப் பெருக்கு – ஆடி 18 - சன்மார்க்க விளக்கம் “

ஆடிப் பெருக்கு – ஆடி 18 - சன்மார்க்க விளக்கம் “ இந்த பண்டிகை நீர் நிலைகள் உள்ள எல்லா நகரத்தில் கொண்டாடுகின்றார் திருச்சி – மாயவரம் போன்ற நகரங்களில் இந்த பண்டிகை விசேஷமாக கொண்டாடுகிறார் நம் மக்கள் இதன் அர்த்தம் யாதெனில் ?? முற்காலத்தில் 18 ஆம் நாளில் காவிரியில் வெள்ளம் பெருகி ஓடும் போது இதைக்கொண்டாடினர் 18ம் படி – நாம் பயணிக்கும் படிகள் – மாடிப்படிகள் அல்ல சுழுமுனை உச்சி தான் 18ம் படி ஆம் இங்கு – இந்த இடத்தில் – சாதனா தந்திரத்தால் சோமசூரியாக்கினிக்கலைகளின் வெள்ளம் வந்து சேர்வதால் – புறத்தில் இந்த அனுபவத்தை சடங்காக வைத்து கொண்டாடி – இது மாதிரி நாமும் அகத்தில் ஆற்ற வேணும் என கூறிச்சென்றுள்ளார் நம் அறிவிற் சிறந்த முன்னோர் எல்லா சடங்கும் பண்டிகையும் அக அனுபவத்தின் புற வெளிப்பாடே அன்றி வேறில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.