Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 17 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 17 விளக்கம்
அருளும் பொருளும் பெற்றேன் அடியனாகி நானுமே
அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே
இருளும் நிறத்து கூற்றைத் துரத்தி அருள் சிற்ஜோதியே
என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்றது ஆதியே ( பாடல் 61 )
அருளும் பொருளும் பெற்றேன் அடியனாகி நானுமே – திருவடிப் பற்றி பயிற்சி சாதனம் பயின்று அதில் வளர்ச்சி கண்டு தான் அடியவனாகி , அதனால் அருளும் பொருளும் பெற்றேன்
அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே – மாயை மற்றும் வினைகள் என்ற மலங்கள் ஆன்ம நிலையில் செயல்படாது – தான் ஆன்ம நிலைக்கு வளர்ச்சி அடைந்துவிட்டபடியால் அதன் மேல் எந்தவொரு பயமும் இல்லை
இருளும் நிறத்து கூற்றைத் துரத்தி அருள் சிற்ஜோதியே
என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்றது ஆதியே – என்பது அருள்ஜோதி அவரது அகத்தும் புறத்தும் எப்போதும் துணை காக்க நின்றதால் , அது கூற்றென்னும் மரணத்தை துரத்தி அடித்துவிட்டது
திரண்ட கருத்து :
ஆன்ம நிலையில் மாயை கன்ம மலங்கள் செயல்படாததால் – அன்னிலைக்கு ஓங்கி வளர்ந்து விட்டபடியால் அதன்மேல் எள்ளளவு பயம் கூட இல்லை என்று பெருமைப் படுகின்றார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.