Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 மனாதிகட் கரிய மதாதீத வெளியாம் அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி பொருள் : மனம் முதலிய கரணாதிகட்கும் அறிய முடிய மாட்டாத உயரிய நிலையில் இருக்கும் வெளி சிற்சபை வெளி அதாவது இங்கு மனம் முதலிய கருவி கரணங்கள் தத்தம் சக்தி இழந்து – இறந்தும் பணி செய்யாமல் இருக்கும் – அது சுத்த வெளி ஆகும் 2 ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம் ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி பொருள் : படித்து படித்து பார்த்தாலும் உணர முடியாத உயர்ந்த நிலையில் விளங்கும் சிற்சபை அதாவது சிற்றறிவு என்பது நம் மனம் ஆகிய கருவி கொண்டு வருவதால் – அந்த சிற்றறிவால் பார்க்க / உணர முடியாது ஆன்ம நிலையில் – அந்த அனுபவத்திலே அருகிய காட்சியாக காணக்கூடிய ஒன்று எப்படி நம் கருவி கரணத்தால் அறிய முடியும் ??? இது தான் சிற்சபை பெருமை ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.