Saturday, April 25, 2026

திருமந்திரமும் - திருவருட்பாவும் “

திருமந்திரமும் - திருவருட்பாவும் “ 8ம் திருமந்திரம் ஆறாறில் ஐயைந்தகல நனாநனா வாறா மவைவிட வாகு நனாக்கனா வேறான ஐந்தும் விட நனாவினில் ஈறாஞ் சுழுத்தி யிதின்மாயை தானே அதாவது 36 தத்துவத்தில் 25 தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் 24 + 1 புருஷ தத்துவம் கழல அது நனவில் நனா எனும் அவத்தை மேலும் 6 வித்தியா தத்துவங்கள் – கலை காலம் என இதரவைகள் கழல அப்போது வரும் அவத்தை நனவில் கனவு ஆகும் கடை ஆம் சிவதத்துவம் 5ம் கழல – அப்போது நனவில் உறக்கம் ஆம் எங்கிறார் மூலர் இதை தான் வள்ளல் பெருமான் “தத்துவ நிக்கிரகம் “ என்ற தலைப்பில் உரை செய்துள்ளார் நம் சன்மார்க்க அன்பர்கள் திருமந்திரத்தை தள்ளி வைத்துவிடுவார் – அது சமய நூலாம் நல்ல வேடிக்கை அதனால் இன்னமும் இருளில் இருக்கார் ஜீவகாருண்ணியம் அன்னதானம் தான் வழி எங்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.