Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 15, 2026
பழமொழியும் - உண்மை அர்த்தமும்
பழமொழியும் - உண்மை அர்த்தமும்
1 யானைக்கு ஒரு காலம் வந்தா – பூனைக்கு ஒரு காலம் வரும்
உலக வழக்கு : பெரிய மனிதர்க்கு ஒரு நல்ல நேரம் வந்தால் – சிறு மனிதர் ஏழைக்கும் காலம் வரும்
உண்மை பொருள் :
யானை அல்ல
ஆ + நெய்
அதாவது பசு நெய் சாப்பிட்டு உடல் பெருத்துப்போகும் காலம் வந்தால் ,
பூனை அல்ல
பூ + நெய் = தேன்
தேன் உணடு உடல் இளைக்கும் காலமும் வரும் என்ற பொருளில் இந்த மொழி வந்தது
2 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் – தன் பிள்ளை தானே வளரும்
உலக வழக்கு : அதாவது அக்கம்பக்கத்துவீட்டு பிள்ளை உணவு ஊட்டி வளர்த்தால் , நம்ம பிள்ளை நல்லா வளரும்
உண்மை பொருள் :
ஊரார் பிள்ளை என்பது ஒரு தாய்க்கு – தன் மருமகள்
மருமகள் நல்லா உணவு உண்டு வளர்ந்தால் – அவன் பிள்ளை ஆகிய மகன் நல்லா உணவுண்டு வளர்வான்
அதே போல் – ஒரு கணவனுக்கு தன் மனைவி ஊரார் பிள்ளை ஆவாள்
அவள் நன்கு உணவுண்டு வளர்ந்தால் – அவன் பிள்ளைகள் நன் கு வளர்வர் என்ற பொருளில் இந்த மொழி வந்தது
எப்போதும் உலகத்துக்கும் உண்மைக்கும் ஏழாம் பொருத்தம் தானே??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.