மெய்யருள் வியப்பு – 41 விளக்கம்
1 பனிரெண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே
துனியாத அந்தப் பாடு சுகமதாயிற்றே
துரை நின் மெய்யருளிங்க் எனக்கு சொந்தமதாயிற்றே ( 78 )
ஈறாறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருளிங்க் எனக்கு சொந்தமதாயிற்றே ( 79 )
இந்தப் பாடலில் வள்ளலார் தான் 12 அகவை முதல் சன்மார்க்கச் சாதனமாகிய கண்களைக் கொண்டு செய்யும் தவம் மேற்கொண்டு – அதில் பல அனுபவங்களை பெற்று, அதனை நன்கு பற்றி உச்ச அனுபவங்களுக்கெல்லாம் சென்றார்.
கண்களை கொண்டு செய்யும் தவம் என்பது கண்களை உள்ளே திருப்பி உலக காட்சிகளை நோக்காமல் அகத்தை மட்டும் பார்க்குமாறு செய்தல் ஆகும்
தன் உணர்வு சுழிமுனை வருவதற்கு பட்ட பாட்டை தான் இப்பாடலில் உரைக்கின்றார்
கண்மணிகளை திருப்புவது அவ்வளவு சுலபம் அல்ல – இந்தக் துயரங்களைத் தான்
ஈறாறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே என்று பாடுகின்றார்
ஒவ்வொரு அனுபவமும் நடைமுறைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல – ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் தொடர்பும் சம்பந்தமும் உண்டு –
கீழ் நிலை அனுபவம் சித்தி அடைந்து முழுமை அடைந்தால் தான் மேல் நிலை அனுபவத்துக்கு செல்ல முடியும் –
கீழ் நிலை அனுபவம் கைகூடினால் தான் மேல் நிலை அனுபவங்கள் சித்தி ஆகும்
மேல் நிலை அனுபவங்கள் சித்தி ஆவதற்குள் காலம் விரயமாகி விடுகின்றது
பகல் என்று உரைப்பதன் காரணம் – அவரின் உணர்வு இரவு பகலற்ற துவாதசாந்த பெருவெளி அடைந்துவிட்டதை, தனக்கு இரவு என்பது கிடையாது என்பது உலகிற்கு அறிவிக்கவே பகலென்றே உரைக்கின்றார்
ஆனால் அந்த துயரங்கள் – கஷ்டங்கள் – பாடு எல்லாம் இறுதியில் அவருக்கு பேரின்பச் சுகத்தை தந்தன என்பது உண்மை
வள்ளலார் தவம் செய்து தான் இந்த பேரின்ப பெருவாழ்வு அடைந்தார் என்பதை சன்மார்க்க சங்கத்தவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.