Monday, April 13, 2026

காரை சித்தர் – சித்துவிளையாட்டு

காரை சித்தர் – சித்துவிளையாட்டு உண்மை சம்பவம் இவர் பேரன் என்னை சென்னை வீட்டில் இம்மாதம் சந்தித்த போது கூறியது அப்போது சித்தர் ( இயற்பெயர் – ராகவன் ) தன் பள்ளியிலேயே பல சித்துக்களை புரிந்துளதாக அவர் தெரிவித்தார் ஒரு சமயம் – அவர் ஆசிரியர் – கிறித்தவர் – தன் இடத்துக்கு திரும்பிய போது , எல்லா சக ஆசிரியரும் அவரைப்பார்த்து சிரித்தார்களாம் ஏன் ?? என கேட்க , சென்று கண்ணாடி பார்க்கவும் என்றனராம் அவர் சென்று பார்க்க – திகைத்துவிட்டாராம் அவர் நெற்றியில் நாமம் இருந்ததாம் எவ்வளவோ அழிக்க முயன்றும் முடியவிலையாம் அவர் சென்று தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க , அவரோ ராகவனிடம் ஏதாவது பிரஸ்னையா ?? என கேட்க , ஆமாம் அவனை இன்று அடித்தேன் அவர் : அவனிடம் வம்பு பிரச்னை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றாராம் இந்த சேதி எனக்கு புதிது நான் பல முறை குடந்தையில் அவர் சமாதி சென்ற போதிலும் இதை கேள்விப்பட்டதிலை ஊர் மக்கள் கூறுவர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.