Saturday, April 25, 2026

சகஜப்பழக்கத்துக்கு வள்ளல் பெருமான் கூறும் உபாயம்

சகஜப்பழக்கத்துக்கு வள்ளல் பெருமான் கூறும் உபாயம் தியானம் தவம் செய்யாத எல்லாரும் இந்த சொற்றொடர் கூறுவர் : சமாதிப் பழக்கம் பழக்கம் அல்ல - சகஜம் தான் “ – உரை நடையில் இருந்து சரி – சகஜமாக எப்படி இருப்பது ?? மக்கள் விளக்கம் : உலக வாழ்வில் ஈடுபட்டு இருத்தல் தான் – காடு மலை குகை என செல்லாமல் இருத்தல் என்பர் நல்ல நகைச்சுவை இலையா ?? சகஜம் எனில் : வள்ளல் கூறும் பயிற்சி : “ மனதை சதா சிற்சபையில் நிறுத்தப்பழகவும் – அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தப்பழகவும் “ இதுவும் உரை நடையில் தான் அவர் கூற வருவது நம் மனதை நடு நெற்றியில் – சிற்சபையில் சதாகாலம் நிறுத்த பழகவும் – அதான் எப்போதும் இறை நினைப்புடன் – இறைக்கலப்புடன் இருக்க வைக்கும் என்பதால் இது சகஜ சமாதிக்கான பயிற்சி ஆம் ஆற்றுவார் ஆர் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.