Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
அக்காலமும் இக்காலமும் “
அக்காலமும் இக்காலமும் “
அக்காலம் :
ராஜ ராஜ சோழன் காலத்தில் அதாவது அவர் பெரியப்பா மகன் மதுராந்தக சோழன் தமிழ் நாட்டை ஆண்ட காலத்தில் , கேரள நம்பூதிரியர் தான் முதல் / நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் ,
அந்தணர் கை ஓங்கியிருந்த காலத்தில் , அவர் 5 வயது பிள்ளை தெருவில் இறங்கி விளையாடினால் , அரசு தேர் பல்லக்கு குதிரை எல்லாம் சுற்றி தான் செல்லணுமாம்
அந்த தெருவழியாக செல்ல முடியாதாம்
அவர்க்கு அவ்வளவு மரியாதை வைத்திருந்த காலம்
இக்காலம் :
மேலே இருப்பது தான் இப்போதும் நடக்குது
பிணத்தை கீழ் ஜாதி மக்கள் சுடுகாட்டுக்கு எடுத்து போகும் போது , உயர் ஜாதி தெரு வழியாக / அவர் பக்கம் போகாதவாறு செல்லணும் என இங்கும் அங்கும் நடக்குது
இது அவலம்
இது விட இன்னும் ஒரு படி மேலேறி ,
நம் விநாயகர் ஊர்வலம் மத்த மதத்தவர் வசிக்கும் தெரு வழியாகக் எடுத்து செல்லக்கூடாது என அவர் போடும் தடை
சிரிப்பதா வேதனைப்படுவதா ??
ஆக ஆக , பல ஆயிரம் ஆண்டு கடந்த பின்னும் இந்த நிலை தொடர்வதால் , ஜாதி மதம் பேதம் சண்டை ஒழிக்கவே முடியாது என இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்
எத்தனை சமூக சீர்திருத்தவாதி வந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்
அப்படி சாதித்து விட்டேன் என அவர் கூறினால் அது ஓட்டுக்காகத் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.