Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்ஜோதி அகவல்

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல் அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி ( 7 – 8 ) பொருள் : இதுக்கு விளக்கம் அவசியமேயிலை எனினும் வள்ளல் பிரான் தன் உரை நடையில் கூறிச்சென்றுள்ள சில விளக்கம் அளிக்க வேண்டி – இந்த அகவல் பதிவு “ பிண்டானுபவ இலக்கணம் “ பக்கம் 266 -267 நாதஸ்தானம் தொட்டு – துவாதசாந்தம் வரையில் அனுபவ வெளியாகிய ஆகாச பேதமாக இருக்கும் அதற்கு மேல் அதிகாரண மாத்திரமாய் ஆன்மானுபவத்தில் விளங்கும் மேலும் பிரமத்தானம் தொடங்கி சுத்த சிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம் , இருதயம் வரையில் வாயு நாடி வண்ணமாயும் , அதுக்கு மேல் அக்னி வண்ணமாயும் இருக்கும் இது அடியில் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்கு புலப்படாமல் அணுவுக்கணுவாய் – ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் – ஆன்மக்காட்சியில் அருகி தோன்றுவதாய் – இரண்டற நிற்கும் இதற்கு சிவாகார பூரணஸ்தம்பம் என பேர் “ இது அடியில் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்கு புலப்படாமல் அணுவுக்கணுவாய் – ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் – ஆன்மக்காட்சியில் அருகி தோன்றுவதாய் – இரண்டற நிற்கும் “ - இந்த விளக்கத்துக்காகத்தான் இந்த பதிவு அதாவது கண் – மனதுக்கு புலப்படாததாய் விளங்கும் பெரு வெளி அனுபவம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.