Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 23, 2026
கதம்பக் கட்டுரை – பெருமை
கதம்பக் கட்டுரை – பெருமை
1 கண்மணி பெருமை
காற்றின் இருப்பு
பொருளின் அசைவால் அறிந்து கொள்வது போல்
மனதின் இருப்பை
கண்களின் அசைவால் அறிந்து கொள்ளமுடியும்
கண் அசைவு ஒழிந்தால்
மனதின் அசைவு ஒழியும்
மனமும் ஒழியும்
2 அருள் பெருமை
குரு :
தான் நின்ற வண்ணம்
தம் மாணாக்கரை
அறிவில் சாதனையில் அனுபவத்தில் உயர்த்தி நிற்க வைப்பவர்
இதையே தான் அருளும் பிரபஞ்சமும் செய்யுது
தான் எண்ணியதை – கற்றுக்கொடுக்க எண்ணிய பாடத்தை
அது நமக்கு புரிய வைக்குது
அதுக்கு தேவையானவற்றை எலாம் செயுது
புரிய வைத்த பின்
சாதனத்தில் மேன்மேலும் வளர்க்குது
அனுபவம் கூட வைக்குது
இதுக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம்
இது அருள் பெருமை ஆம்
3 கண்மணி பெருமை
ஒரு பெண்
காதல் அம்பு தொடுத்தால்
காதலன் இதயம் துளைத்து
இரத்தம் கசியுது வழியுது
ஆன்ம சாதகன்
பார்வை அம்பு இதயத்துக்கு தொடுத்தால்
அது பிளந்து
அமுத கலசம் உடைந்து
அமுதம் வழியுது
இது எப்படி இருக்கு ?
4 திருவடி பெருமை
உலகம் இரும்புக்கரம் கொண்டு
கலவரம் போராட்டத்தை அடக்குது
ஆனால்
ஆன்ம சாதகனோ
மென் மலர்ப்பாதம் கொண்டு
கலவரம் – போராட்டம் செயும் மனதை அடக்கிவிடுகிறான்
இது என் அனுபவம் கூட
எப்படி இருக்கு ??
5 கண்மணி - திருவடி பெருமை
சிவத்தின் சிற்றம்பல நடம் நின்றால்
உலக இயக்கம் நின்றுவிடும்
கண்மணிகள் நடனம் ஆட்டம் நின்றால்
மனதின் இயக்கம் ஆட்டம் நின்றுடும்
இது கண்மணி பெருமை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.