Saturday, April 25, 2026

சமய மதங்கள் இதிகாச புராணங்கள் - சிறு தெளிவுரை “

சமய மதங்கள் இதிகாச புராணங்கள் - சிறு தெளிவுரை “ சமய மதமே – எல்லாம் தன்னிலே அசலானவை அல்ல அவைகள் மற்றதிலிருந்து நிறைய விஷயங்கள் களவாடப்பட்டு , தம்முடையதாக ஆக்கிக்கொள்ளும் ஒன்றிலிருந்து மற்றது உருவாகியிருக்கும் – ஆனால் அதை ஒப்புக்கொள்ளாது மறுக்கும் தன்னுடையது தான் அசல் என உரைக்கும் இதிலிருந்து தான் இதிகாசம் புராணம் உதித்தமையால் – இதிலும் இந்த பித்தலாட்டங்கள் சூது களவாடல் தொடரும் என்பதில் ஐயமிலை இதிகாச புராணம் என்பது அந்த அந்த பகுதியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை சில பல கற்பனையுடன் – உருவகம் எல்லாம் கலந்து படைக்கப்பட்டிருக்கும் இதிகாச புராணத்தை , ஒன்றிலிருந்து களவாடும் போது அந்த சமய மதத்தவர் தங்கள் வன்மம் கோபத்தால் தூண்டப்பட்டு , அதை எல்லாம் சேர்த்து புதிய இதிகாசம் உருவாகி விடும் அது அசலிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் - உண்மைக்கு புறம்பாகவே இருக்கும் புதிய புராணம் என்பது அசலின் திரிபாக இருக்கும் அதனால் தானோ வள்ளல் பெருமான் இதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது என புறம் தள்ளினாரோ ? உண்மையில் இதிகாசம் எனில் “ உலக மகா திரிபு “ என கொள்ளலாம் - களவாடப்பட்டிருந்தால் உதாரணம் - ஏழுமலையில் முருகன் வீற்றிருக்க – அதுக்கு நாமம் போட்டு பெருமாளாக்கி – வைணவம் சைவத்திடம் இருந்து களவாடியது போல் தான் – அனேக இதிகாச புராணங்களும் களவாடி – திரித்தது தான் ஜாக்கிரதை – சர்வ ஜாக்கிரதை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.