Wednesday, April 22, 2026

சித்தர் பாடல் - உண்மை விளக்கம்

சித்தர் பாடல் - உண்மை விளக்கம் ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா உன்பாதஞ் சேரேனோ. பொருள் : இது கண் தவத்தின் பெருமை எடுத்துரைக்க வந்த பாடல் சாதாரண ஜீவன் பிறத்தல் = ஆண் பெண் சேர்க்கையில் – நாத விந்து கலத்தலில் ஆகுதல் இது புறம் மாற்றிப் பிறத்தல் என்பது = சாதனா தந்திரத்தால் தனக்குள்ளே நாத விந்து ( இரு கண் ) சேர்க்கை செய்து , அதன் மூலம் ஜீவன் உள்ளுக்குளே உண்டாக்கி – அதன் மூலம் ஆன்மாவை அடைதல் ஆம் வள்ளல் பிரான் உரை நடையில் – ஜீவன் கண்டத்தில் எங்கிறார் அதாவது கண்டத்தில் எனில் இரு துண்டாக இரு கண்ணில் அதை ஒன்றுபடுத்துவதன் மூலம் முழுமையான உயிர் உருவாகும் தவம் ஆகிய ஒன்றுபடுத்துவது தான் மருந்து அந்த மருந்து மூலம் புது பிறப்பு எடுத்து – ஆன்மாவின் பாதம் சேரேனோ என்று பாடுகிறார் சித்தர் யார் சரியான அர்த்தம் புரிந்து – தவம் செய்து இலக்கை அடைகிறார் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.