Saturday, April 25, 2026

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா காலண்டரையே பார்க்கறே – கைவிரல விட்டு என்ன எண்ணிக்கிடே இருக்கே?? செந்தில் : இல்லண்ணே – 2024 க்கு இன்னம் எத்தனை வருஷம் பாக்கி இருக்குன்னு பார்க்கறேன் ? க மணி : ஏன் – அந்தாண்டு தேர்தல்ல யார் ஜெயிப்பாங்கன்னு கணக்கு பாக்கிறியா ?? ஸெந்தில் : அது இல்லண்ணே -அப்போவும் தாமரை தான் அண்ணே ஜெயிக்கும் நம்ம சன்மார்க்க மக்கள் எலாம் 2024 வந்து வள்ளலார் சித்தி அடை ஞ்சி 150 வருஷம் ஆயிருக்கும் – அந்த வருஷத்தில் இருந்து சன்மார்க்க காலம் ஆரம்பிக்கும்னு வாய பொளந்திட்டு காத்திருக்காங்கோ அது நடக்குமான்னு தான் பார்க்கறேன் க மணி : அதென்ன 150 வருஷம் ?? ஸெந்தில் : அவுக 2 ½ கடிகை கணக்கு = 150 வருஷம்னு தப்பு கணக்கு போட்றாய்ங்க அண்ணே இன்னமும் நம்ம மக்கள் மதத்தில சமரசம் அடையாத போது – இவுக எங்கே இதெல்லாம் விட்டு – எல்லாம் தாண்டி போகப்போறாங்க ?? அதெலாம் வெறும் கனவு கானல் தான் அல்லா – அல்லே லூயானு ஒரே கூத்தா இருக்கும் போது எங்கே இதெல்லாம் ஒழிந்து சமம் வரப்போவுது ?? ஆனால் எல்லா சன்மார்க்கத்தாரும் வாயை பிளந்து 2024 க்கு காத்துகிடக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.