Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 9 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 9 விளக்கம்
இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனினான் விடுவனோ
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே
கோவே உன்றன் அருட்சிற் சோதி என்னதாயிற்றே ( பாடல் 57 )
இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனினான் விடுவனோ – திருவடியை – ஆன்மாவை இறுகப் பற்றிக் கொண்டேன் , அதனை இனி விட மாட்டேன்
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – ஆன்மாவைப் பற்றியபின் உலகில் வேறு எதனையும் நினைக்க மாட்டேன் – பற்ற மாட்டேன்
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே – மரணம் என்னைப் பார்த்து பயந்து ஓடிப் போயிற்றே
திரண்ட கருத்து :
திருவடியைக் கொண்டு ஆன்மா நிலையை அடைந்ததாலும் ஆன்மாவை விடாமல் பற்றியதால் – வேறெதனையும் பற்றாததனால் யமன் என்னைப் பார்த்து பயந்து ஓடிப்போனது என்று திருவடிப் பெருமை = ஆன்மாவின் பெருமையையும் பாடுகின்றார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.