Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 7 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 7 விளக்கம்
வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே
மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே
இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே ( பாடல் 69 )
வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே – ஆன்மாவின் திருஷ்டி / பார்வை / ஒளி தன் ஜீவன் மீது பதிந்ததை இவ்வாறு வள்ளல் பாடுகின்றார்
மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே – ஆன்ம தரிசனத்தால் மாயை மற்றும் கன்ம மலங்கள் அழிந்ததை குறிப்பிடுகின்றார்
இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே – தன் பூதமயமாகிய அசுத்த தேகம் வாதமாகி, மாறி, சாயை விழா சுத்த தேகம் தனக்கு கிட்டியது என்று தன் சாதனையை இவ்வுலகிற்கு விரித்துரைக்கின்றார்
திரண்ட கருத்து :
ஆன்ம தரிசனத்தால் மலங்கள் கழிந்து தான் ஆன்ம தேகமாகிய சுத்த தேகம் பெற்றதை இங்கு விளக்குகின்றார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.