Wednesday, April 15, 2026

மெய்யருள் வியப்பு – 40 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 40 விளக்கம் 1 என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே பொன்னைக் காட்டி பொன்னே நினது புகழைப் பாடியே புந்தி கழிக்க வைத்தாய் அழியாதென்னை நாடியே ( பாடல் 92 ) மெய்யருள் வியப்பு பாடல்கள் முழுதும் ஆன்ம அனுபவப் பாடல்கள் ஆகும் என்னைக் காட்டி = ஆன்மாவாகிய என்னை தரிசிக்க வைத்து ( 36 தத்துவங்களை கடக்கச் செய்து ) என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே – ஆன்மாவிற்குள் இருக்கும் சிவத்தைக் காண்பிக்க வைத்து இறங்கா நிலையில் ஏற்றி – அவரது உணர்வு கீழே நோக்காதவாறு எப்போதும் மேலேயே நோக்கச் செய்து – இது எப்படி சாத்தியம் எனில் சுழிமுனை – பிரமரந்திரம் திறந்து விட்டால் நம் உணர்வு கீழே எப்போதும் நோக்காது ஞான அமுதம் ஊட்டியே – ஆகாய கங்கையை சுரக்க வைத்து என்று பொருள் இப்பாடலின் திரண்ட கருத்து : 36 தத்துவங்களை கடந்து ஆன்மாவை தரிசிக்க வைத்து , அதனுள் சிவத்தை காண்பித்து , உணர்வு எப்போதும் மேல் நிலையிலே இருக்க வைக்க பிரமரந்திரத்தை திறக்கச் செய்து , பின்னர் அமுதமாம் ஆகாய கங்கையை உண்ண வைத்தார் என்று தன் ஆன்ம அனுபவத்தைப் பாடுகின்றார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.