Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 15, 2026
இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3
இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3
I கோவில் அமைப்பு :
1 துவஜஸ்தம்பத்தின் அடியில் பொன் , பணம் , வைர நகைகளை இட்டிருப்பர்.
அருத்தம் :
அங்கு ” விந்து கலை – ஒளி � இருக்கிறது என்பதை தெரிவிக்க
2 துவஜஸ்தம்பத்தைச் சுற்றி வெள்ளைத் துணிச் சுற்றி மேல் வரை போகும்
அருத்தம் : விந்து கலை சுழிமுனை நாடி வழியாக மேலே போகின்றது என்று பொருள்.
3 துவஜஸ்தம்பத்தின் முடிவில் மணிகள் இருக்கும்
அருத்தம் : சுழிமுனை நாடி முடியில் நாதம் விளங்குகின்றது என்பதை உணர்த்த
II திருமணமான பெண்கள் எல்லா வண்ண உடைகளையும் அணிவர்
பொருள் : அவர்கள் உலக மயமாய் இருப்பதனால் எல்லா வண்ண உடைகளையும் அணிகிறார்கள் .
வண்ண உடைகள் = எல்லா குணங்களிலும் – ஆசை – பாசம் – ராக – துவேஷங்களிலும் அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்
அதே , விதவைகள் மற்றும் புருஷனை இழந்தவர்கள் – வெறும் வெள்ளை ஆடை மட்டுமே அணிவர்
பொருள் : அவர்கள் – எல்லா குணங்களையும் தாண்டி போய்விட்டோம் என்பதை சூசகமாகத் தெரிவிக்கின்றனர் – நாங்கள் உலக மயமாய் இல்லை – இறைமை நோக்கி இருக்கிறோம் என்கிறார்கள்.
வெண்மை = எல்லா நிறங்களையும் தனக்குள் அடக்கியது போன்று விதவைகள் எல்லா ஆசா பாசம் – ராக – துவேஷங்களை நாங்கள் கடந்து விட்டோம் என்பதைக் குறிக்கின்றது அவர்களின் இந்த ஆடை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.