Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 15 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 15 விளக்கம்
வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே
வஞ்ச வினைகள் எனை விட்டோடித் தலை வணங்குதே
எள்ளாது உனது புகழைக் கேட்கச் செவி நயக்குதே
எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம் வியக்குதே ( பாடல் 33 )
வஞ்ச வினைகள் எனை விட்டோடித் தலை வணங்குதே – ஆன்மாவின் எழுச்சியினாலும், ஆன்மாவின் சன்னிதானத்தில் அவரது உணர்வு சென்ற போது , அதனால் வினைகள் எல்லாம் ஓடியது
எந்தாய் தயவை எண்ணுந்தோறும் உளம் வியக்குதே – ஆன்மா அவர் ஜீவன் மீது காட்டிய கருணை பரிவு எண்ணும் தோறும் வள்ளலுக்கு ஆச்சரியம் மேலோங்கி நிற்கின்றது
திரண்ட கருத்து :
ஆன்மா இயற்கையிலேயே தயவே வடிவானது என்பதை மறந்து விடக் கூடாது –
அதனால் தான் ஜீவன் கண் கருணை தயவு மழை பொழிகின்றது – அதனால் மலங்கள் கழிந்து தன் சுய தரிசனம் ( ஆன்ம ) சித்தி ஆகின்றது
ஆன்மாவின் உதவி இல்லாமல் மலக் கழிவும் ஆன்ம தரிசனம் சாத்தியமே இல்லை என்பது உறுதி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.