Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 10 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 10 விளக்கம் புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் ( பாடல் 75 ) புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை ஆகிவிட்டேன் என்கிறார் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மாவின் தயவினால் கருணையினால் சுழிமுனை நாடி மீதேறினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மா நிலை என்னும் தவள மாடத்தை அடைந்தேன் திரண்ட கருத்து : ஆன்மாவுக்கு அடிமை ஆனதால் – அதனால் கிடைத்த ஆன்மாவின் தயவினால் கருணையினால் ஆன்ம நிலை என்னும் தவள மாடம் அடைந்ததை இங்கு வள்ளல் பெருமான் விரித்துரைக்கின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.