Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
குறள் - சன்மார்க்க விளக்கம்
குறள் - சன்மார்க்க விளக்கம்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி
நின்றார் நீடு வாழ்வார்
பொருள் :
நம் இந்திரியப் பொறிகள் - மெய் வாய் கண் மூக்கு செவி சதா எரிந்த படி உள
அவைகள் அக்னி மூலையில் இருப்பதாலும் அவை எரிந்த படியும் - உலக வாழ்வு நோக்கி செயல்படுது
ஐந்தவித்தல் = ஐம்பொறிகளை அக்னி மூலையில் இருந்து - பிரணவத்தில் சேர்த்தல் ஆகும்
அதுக்கு கண் தவம் செய வேண்டும்
இதைத்தான் திருவிளையாடற் புராணத்தில் - சுத்த சிவம் வலை வீசி மீனை பிடித்ததாக சித்தரித்துள்ளனர்
வலை = கண்
மீன் = இந்திரியங்கள்
இந்த கண் தவமானது இந்திரியங்களை அக்னி மூலையிலிருந்து பிரணவத்தில் சேர்த்துவிடும் வல்லமை உடைத்து
மேலும் அவித்தல் என்பது நிலை மாற்றல் மாதிரி - அதாவது கடலை அவித்தல் மாதிரி
நம் இந்திரியங்களை உலக நோக்காக இருப்பதை மாற்றி - உள்ளே திருப்பி - ஆன்ம நோக்கமாக மாற்ற செய்தல் ஆம்
இது அவைகளை ஒழுக்க நெறியில் நிற்க வைப்பதாகும்
இவ்வாறு யார் ஆற்றுகிறாரோ ?? அவர் இந்த அவனியில் நீடூழி வாழ்வார் எங்கிறார் வள்ளுவர்
வெங்கடேஷ்
குறிப்பு : குறள் ஒரு ஞான நூல் - எனவே இதுக்கு உரை விளக்கம் மெய்ஞ்ஞானியரால் கொடுக்கப்பெற்றதை தான் படிக்க வேணும் - கல்வி ஞானியர் கொடுத்ததை அல்ல
அதுவும் அரசியல் தலைவர் உரை எலாம் படிக்கவே கூடாது
venkatesh
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.