Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 38 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 38 விளக்கம்
1 கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ ( பாடல் 55 )
மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவங்களைக் குறிக்கின்ற பாடல்களாகும்
கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ = வள்ளலார் கண்பார்வையும் மனமும் ஆன்மா விளங்குகின்ற நடு நெற்றியிலேயே இருக்கின்றதே அல்லாமல் உலகத்தை நோக்கவில்லை என்று கூறுகின்றார்
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ = மும்மலம் தீர்ந்து நான் ஆன்மாவை தரிசித்து விட்டேன் , அதனிடத்து மாயை கன்ம மலங்கள் இல்லையாகையால், தன்னை மாயையால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாடுகின்றார்
வள்ளலார் தான் ஆன்ம நிலை அடைந்துவிட்டதை உறுதிப் படுத்துகின்றார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.