Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 38 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 38 விளக்கம் 1 கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ ( பாடல் 55 ) மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவங்களைக் குறிக்கின்ற பாடல்களாகும் கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ = வள்ளலார் கண்பார்வையும் மனமும் ஆன்மா விளங்குகின்ற நடு நெற்றியிலேயே இருக்கின்றதே அல்லாமல் உலகத்தை நோக்கவில்லை என்று கூறுகின்றார் கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ = மும்மலம் தீர்ந்து நான் ஆன்மாவை தரிசித்து விட்டேன் , அதனிடத்து மாயை கன்ம மலங்கள் இல்லையாகையால், தன்னை மாயையால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாடுகின்றார் வள்ளலார் தான் ஆன்ம நிலை அடைந்துவிட்டதை உறுதிப் படுத்துகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.