Monday, April 13, 2026

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பத்தாம் வாசல் பெருமை சோதியே பெருஞ்சோதி சொல்லொண்ணாது சுழிவாசல் தான்திறந்தார் காண்பார்பூண்பார் ஆதியோ யிவ்வாசல் நுழையக்காணார் ஆர்காண்பார் மெய்ஞ்ஞானம் அரிது சத்தே வீதியோ மேல்வாசல் கெதியாம் வாசல் மெய்ஞ்ஞான வீட்தனிற் குள்ளே சென்றால் தீதியோ துன்பமில்லை கண்ணாம் வீட்டில் செந்தணலைகண்டிலாம் தெருவில் தானே பொருள் : வாயால் உரைக்கவொண்ணாத ஜோதியாம் ஆன்ம ஜோதியை - சுழிமுனை திறந்தார் தான் காண்பார் – அதை அனுபவிப்பார் இதை காண்பது மிகவும் அரிதாம் அதிருப்பது மேல் வாசல் ஆகிய 10 ஆம் வாசல் அது மெய் ஞான வீடு ஆகும் அதை திறந்து உளே சென்றுவிட்டால் – ஒரு துன்பமும் தீதுமிலை அப்போது தெருவாம் சுழிமுனை நாடி ஜோதி மயமாய் விளங்கும் செவ்வொளியாம் ஆன்ம ஜோதியைக் காணலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.