Monday, March 2, 2026

உயிர் / அருள் அனுபவமும் – சத்திய ஞான சபைத் திரைகளும்

உயிர் / அருள் அனுபவமும் – சத்திய ஞான சபைத் திரைகளும் 1 உயிர் அனுபவம் : ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை திருச்சிற்றம்பலம் தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என் றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே இது கருப்பு நீலம் பச்சை செம்மை பொன்மை வெண்மை திரை நீங்கும் அனுபவம் குறிக்க வருவது 2 அருள் அனுபவம் பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் பொருள்அரு ளனுபவம் அதற்குப் பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்றறப் பற்றுதி இதுவே சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன் முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் முதலர சியற்றிய துரையே இது கலப்புத் திரை அனுபவம் குறிக்க வருவது அருள் கீழ் இறங்க அதனால் ஏற்படும் ஆன்ம மாற்றம் குறிக்கிறது கீழ் இருந்து மேலே ஏறுதலும் மேலிருந்து கீழ் இறங்கி வருதலும் – கலக்கும் அனுபவம் தான் கலப்புத்திரை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.