Tuesday, March 24, 2026

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3 ஒவ்வொரு மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் : வள்ளலாரின் பதில் : சுத்த சன்மார்க்கத்தின் அனுபவம் விளங்க வேண்டுமெனில் – 17 வது நிலையாகிய சுத்த சிவ துரியாதீதம் என்னும் நிலை சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று உரை நடையில் கூறியிருக்கின்றார் இதை அடைவது தான் ஒவ்வொரு மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் ஆக இருக்க முடியும் சரி ஏன்ன 17 வது நிலை ?? சைவம்/ சைவ சித்தாந்தம் – பூரண சந்திரனின் கலைகள் 16 – அது சிற்றம்பலம் வரை புறத்தில் சிதம்பரமாக காட்டப்பட்டுள்ளது இது தான் நன்னான்கு என கூறப்பெறுது ஆனால் சுத்த சன்மார்க்கம் – ஒரு படி மேல் போய் – 17வது கூறி – அது சுகாதீத – பெரு ஞ்சுக வெளி எனவும் அது புறத்தில் உத்தர ஞான சிதம்பரம் என அழைக்கப்பெறும் என உரைத்துவிட்டார் சைவம் – சைவ சித்தாந்தம் = பூரணம் சிதம்பரம் எனில் சுத்த சன்மார்க்கம் – பூரணாதீதம் -உத்தர ஞான சிதம்பரம் வடலூர்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.