Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 31, 2026
யூ – டியூப் பரிதாபங்கள் - 11
யூ – டியூப் பரிதாபங்கள் - 11
சிரிப்பு - நகைச்சுவை - வேடிக்கை
செந்தில் : அண்ணே ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே
க மணி : என்னடா திடீர்னு – கால்ல விழுகுற – டேய் கால வாரிவிட்ற மாட்டியே
செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – நான் புதுசா யூ டியூப் சேனல் ஆரம்பிக்கிறேன் அண்ணே – அதான்
க மணி : ஓஹோ நல்ல சமாச்சாரம் தான்
செந்தில் : நல்ல டிப்ச் – ஆலோசனை சொல்லுங்க அண்ணே
க மணி :
ஏற்கனவே நிறைய பேர் கொழப்பிக்கிட்டிருக்காங்க – இதுல நீயும் ஒருத்தன் - நிறைய அரை வேக்காடுகள் தான் இருக்காக
பத்து வீடியோவ பாத்தா – நீயும் ஒண்ணு போட்டிரலாம்
முதல்ல
1 ஆதார சக்கரம்
2 பின்ன குண்டலினி பத்தி - அது எங்கே இருக்கு – எப்படி எழுப்பறது
3 வாசி பத்தி
4 நெற்றிக்கண் – பீனியல் சுரப்பி
5 தியானம் தவம்
இது மாதிரி போட்டுக்கிட்டே போகலாம்
ஆனா ஒண்ணுடா – ஜனங்க கிட்ட வித்தியாசமாக எதுவும் சொல்லக்கூடாது
மத்தவங்க சொன்னதையே – பொய்யும் புரட்டுமா நீயும் சொன்னாத் தான் நம்புவாய்ங்க
மாத்தி சொன்னே வச்சிக்க – உனைய ஒதுக்கி வச்சிடுவாங்க – எனைய மாதிரி
செந்தில் : உதாரணம் அண்ணே
க மணி : குண்டலினி முதுகுத்தண்டில இருக்குனு பொய் சொல்லணும்
அதை யோகாசனம் – குண்டி - ஆசனம் சுருக்கற பயிற்சியால ( அஸ்வினி முத்ரை ) எழுப்ப முடியும்நு சொன்னா தான் ஜனங்க நம்புவாங்க
நீ இல்லை – அது தலையில இருக்கு – அதை மேலேத்தறுமிலை – கீழே இறக்கறுதுமிலைனு , உண்மை சொன்னா – ஜனங்க நம்பாம போய்டுவாங்க
அப்றம் உன் வீடியோவுக்கு லைக் வராது – சந்தாதாரர் ஆக மாட்டாங்க – சொல்லிட்டேன் ஆமாம் பாத்து நடந்துக்க
செந்தில் : சரிண்ணே
க மணி : அப்புறம் தியானம் கண்ணை மூடித்தான் செயணும்னு பொய் சொல்லணும்
மாறா – கண் திறந்து தான் செய்யணும் சொன்னா – உன்னை பைத்தியம்னு நினைச்சுப்பாங்க
செந்தில் : சரி அண்ணே – இன்னும்
க மணி :
வள்ளலார் அன்னதானம் செஞ்சு தான் எல்லா சித்தியும் வாங்கினாருனு பொய் சொல்லணும்
அதை தான் ஜனங்களும் எதிர்பார்க்கறாங்க
இல்லை – அவர் தவம் – திருவடி தவம் செஞ்சி அடைஞ்சார்னு உண்மை சொன்னா – உனக்கு மிரட்டல் விடுப்பாங்க
அப்றம்
8/2னா – ரெண்டு கண்ணு
2 நெற்றிக்கண் = ஆனந்த சுரப்பி – பீனியல் சுரப்பி
3 பொற்சபை – சிற்சபைனா – அதுவும் கண்ணு தான்
4 விந்துவை குறியில இருந்து மேலே ஏத்தணும்
இப்படி தப்பு தப்பா சென்னீனா , ஐயா அற்புதம் ஐயானு
தூக்கி வச்சி கொண்டாடுவாங்க
செந்தில் : மொத்தத்தில உண்மை சொல்லாம பொய் , தப்பு தப்பா சொன்னா நல்ல சம்பாதிக்கலாம்னு சொல்றீங்க – இல்லியா அண்ணே
க மணி : ஆமாடா – சரியா பிடிச்சிட்டே
இந்த மாதிரி சொல்லிட்டே போகலாம்டா – எனக்கு நேரமில்ல – அதான் இத்தோட நிறுத்திக்கறேன்
அதுவுமிலாம – மத்த குரு கிட்ட போய் கத்துக்கிட்டு , அதையே வீடியோவா போட்டு , எனக்கு வள்ளலார் வந்து சொன்னாருனு பொய் சொன்னாலும் நல்லா லைக்ச் வரும்
அப்படி நிறைய நிறைய வீடியோ போடலாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.