Tuesday, March 24, 2026

வினோத திருவிளையாடல்

வினோத திருவிளையாடல் முருகனும் ஔவையும் உரையாடுதல் முருகன் : ஆயிரம் சால்ஜாப்பு – சமாளிஃபிகேஷன்கள் சொன்னாலும் , மனம் ஒரு போதும் குருவாகா ஔவையே நீ சைவ சித்தாந்தம் படித்து தெளிவாயாக – மனம் எங்கு தோன்றுது - ? எங்கு அடக்கமாகுது ?? மேலும் எனக்கு மிக நெருக்கமான சிதம்பரம் இராமலிங்கம் அருளிய வசனபாகம் – உரை நடை நன்கு ஊன்றி கவனித்தால் இதன் வித்தியாசம் புரியும் சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா ?? என்ற சம்பவம் அடுத்து இந்த சம்பவம் அரங்கேறுவது துரதிர்ஷ்டம் ஔவை ( சித்த வித்தை ) : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என சுட்டிக்காட்டிய தமிழ்க்கடவுளே - நீ சொன்னதை நான் சிரமேற்கொண்டு ஆற்றுவேன் மறுமுறை உனை சந்திக்கும் போது – இது குறித்து , படித்து தெளிந்து இருப்பேன் – இது உறுதி முருகன் : எனக்கு என்ன கவலை என்றால் – மனம் குரு என்ற வித்தியாசம் தெரியாத போது ?? எப்படி ஜீவன் – ஆன்மா வேறுபாடு உனக்கு புரியப்போகுது என எண்ணினால் மேலும் கவலை அதிமாகுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.