Tuesday, March 24, 2026

ஒருமை – தாரணை வலிமை “

ஒருமை – தாரணை வலிமை “ அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான் சரி இது எப்படி நடக்குது ? எல்லாம் எண்ணத்தின் ஒருமை தரும் வலிமையால் தானே அல்லாது வேறல்ல இது அட்டாங்க யோகம் தாரணையின் வலிமை பெருமை சாதனை இது பெண்கள் விஷயத்தில் கற்பாகவும் ஆன்மீகத்தில் யோக ஞானத்தில் கற்பக மரம் – அமுத சுரபி ஆக கற்பிக்கப்பட்டிருக்கு விஞ்ஞானம் : Thoughts can heal the body But How ?? Divine Oneness will manifest anything and everything we wish வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.