Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 24, 2026
சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும்
சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும்
சைவ சித்தாந்தத்தின் தச காரியம் முழுமையாக அனுபவத்துக்கு வந்தக்கால் சாகாக்கல்வி பூரணம் அடைந்ததாக பொருள் ஆம்
அருட்பா - உரை நடைப் பகுதி
தச காரியம் - விளக்கம்
1. தத்துவ ரூபம்
2 தத்துவ தரிசனம்
3 தத்துவ சுத்தி
36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் - இது தத்துவ வெற்றி
ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும்
மேலும்
இது ஜீவ அனுபவம்
4. ஆன்ம ரூபம்
5. ஆன்ம தரிசனம்
6 ஆன்ம சுத்தி
இது ஆன்ம அனுபவம் - சுழிமுனை திறந்த பிறகு ஏற்படும் அனுபவம் - மௌன நிலை - தன்னை உணர்ந்த நிலை
ஆன்மா மீது சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்த போது ஆன்மாவின் ஆணவம் கெட்டு , சுத்தி அடையும்
இது ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆவது
இது பர வெளி அனுபவம்
7 சிவ ரூபம்
8 சிவ தரிசனம்
9 சிவ யோகம்
10 சிவ போகம்
இவைகள் யாவும் சிவ அனுபவம் - ஆன்மா அனுபவிக்கும் இன்பங்கள் - போகங்கள் ஆகும் - ஆன்ம நிலைக்கு மேல்
இவைகள் பரம்பர பராபர வெளி அனுபவம்
சாகாக்கல்வி அறியும் / அனுபவிக்கும் வெளிகள்
மரணமிலாப்பெருவாழ்வு சித்தி ஆவது இங்கே
ஆக ஜீவன் ஆன்மாவுக்கு மேலேறி ஜீவான்மாவாக வாதம் ஆகணும்
அதன் பின் ஆன்மா சிவத்துக்கு தகுதி பெற்று சாகாக்கல்வி அடைதல்
ஆக தசகாரியத்தில் சாகாக்கல்வி அடக்கம் ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.