Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
Salmon fish – சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – 3
Salmon fish – சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – 3
இந்த வகை மீன் மலை உச்சியில் நன்னீரில் பிறக்குது
பின் , அது நீரின் வெள்ளோட்டத்தின் படி நீந்தி , கடலில் கலந்து , வாழ்கிறது
உப்பு நீரில் வாழ கற்றுக்கொள்ளுது
சுமார் 4/5 ஆண்டுகள் கடலில் வாழ்ந்த பின் , தான் எங்கு பிறந்தோமோ ?? எந்த நீர் நிலையில் பிறந்தோமோ ?? அந்த இடத்துக்கு எதிர் நீச்சல் அடித்து , மீண்டும் அங்கு வந்தடையுது
அதுக்கு பல துன்பம் துயர் அனுபவித்தே வந்தடையுது – பல காலம் நீந்தி தான் வந்தடையுது
அதுக்கேத்தாற் போல் , மீனுக்கு பலப்பல நதிகளின் / நீர் நிலைகளின் வாசனை அறிந்து , அதன்படியே திரும்பி வருமாம் தான் பிறந்த இடத்துக்கே
தான் பிறந்த நதியின் வாசனை அறிந்து வைத்திருந்து
அந்த இடத்துக்கே வந்தடைந்துவிடுமாம்
வந்து , இனப்பெருக்கம் செய்து , குஞ்சு பொரித்துவிட்டு இறந்துவிடுமாம்
அப்பா என்ன விந்தை ?? இயற்கை வினோதம் ??
இதை அறிந்து வைத்திருக்கும் கரடிகள் , அதன் திசையில் காத்திருந்து உண்டுவிடும்
இவ்வாறு மனிதனும் செய்ய வேண்டும் என்பதை இயற்கை சூசகமாக எடுத்துக்காட்டுது இந்த மீன் மூலம்
இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.