Saturday, March 7, 2026

ஞானியர் உலக மயம் - முப்பாழ் – மூவெளி விளக்கம்

ஞானியர் உலக மயம் - முப்பாழ் – மூவெளி விளக்கம் முப்பாழ் – சன்மார்க்க விளக்கம் 1 திருமூலர் திருமந்திரம் : காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. இது உயிர் வெளி – கலை வெளி – சுத்த நல் வெளி ஆகும் – இவைகளில் தான் 36 தத்துவங்கள் அடங்கியுள்ளன 2 வள்ளல் பெருமான் - அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம் மனிதராகிய நாம் வாழ்வதும் எல்லா செயலையும் ஆற்றுவது வெளியில் தான் அதே போல் நம்மை ஆட்டிப்படைக்கும் தத்துவங்களும் இருப்பது வெளியிலும் தான் அவைகள் தத்துவ வெளிகள் ஆம் தத்துவங்கள் 36 ஆன்ம தத்துவம் – 24 வித்யா 7 சிவ தத்துவம் 5 மொத்தம் 36 இவைகள் எங்கெங்கு உள என விளக்கும் அகவல் வரிகள் 1 மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 573 – 574 இதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம் உயிர் வெளியில் வகுத்து வைத்துள்ளதாம் அபெ ஜோதி 2 காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 575 -576 இந்த வரியில் வித்தியா தத்துவங்கள் எலாம் கலைவெளியில் வகுத்து வைத்துளதாம் அபெஜோதி 3 துரிசறு கருவிகள் சுத்த நல் வெளியிடை அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 577 -578 சுத்த தத்துவங்கள் ஆகிய சிவ தத்துவங்களை சுத்த நல் வெளியில் அபெஜோதி வைத்து வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார் வள்ளல் பெருமான் எல்லாம் வெளியில் தோன்றி அங்கேயே ஆட்சி செய்தும் முடிவில் முடியும் இருவரும் ஒரே கருத்து தான் கூறியுளார் – உலக மயம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.