Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
BG Venkatesh / April 1, 2015
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
அதிகாரம் – புலால் மறுத்தல்
குறள் :
கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
சாதாராண விளக்கம் : புலால் உண்ணாதவனையும் , பிற உயிர்களைக் கொல்லாதவனையும் உலகிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்
சன்மார்க்க விளக்கம் :
1 எவன் ஒருவன் தன் உயிரை கொல்லா நெறிக்கு – மரணமிலாப் பெரு நெறிக்கு தக்க சாதனைகள் மூலம் அழைத்துச் செல்கின்றானோ,
2. எவன் ஒருவன் ” விந்து ஜெயத்தை ” மேற்கொண்டு அதில் வெற்றி கண்டு , அதன் மூலம் உயிர்களை கொல்லாமல் இருக்கின்றானோ
( பரியங்க யோகம் மூலம் ( அ) பிற பல யோகங்கள் மூலம் இதனை நடைப்படுத்துகின்றானோ )
அவனை உலகிலுள்ள எல்லா உயிரகளும் கைகூப்பி வணங்கும்
உதாரணம் : மாணிக்க வாசகரை கொல்ல ஏவப்பட்ட யானை – அவரை கொல்லாமல் , அவரை வணங்கி தொழுதுச் சென்றது – அவர் மேற்கூறிய ஒழுக்க நெறிகளில் நின்றிருந்தார்.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.