Saturday, March 7, 2026

ஞானியரும் சாமானியரும் “

ஞானியரும் சாமானியரும் “ மனிதர் சதா அசைந்து அசைந்து சொற்பமே சம்பாத்தியம் பண்ணுகிறார் இது உடல் உழைப்புக்கு சமானம் ஆனால் ஞானியோ அசையாமலே நிலைத்து நின்று எல்லாவற்றையுமே அடைகிறார் இது அறிவை பயன்படுத்தி சம்பாத்தியம் செய்வது மாதிரி கோடியாக கோடியாக கொட்டுவது வள்ளல் பெருமான் : 1 ஆடாதீர் சற்றும் அசையாதீர் 2 ஆன்மா அசையாமல் ஆடாமல் நிற்பது திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருள்விளக்க மாலை. திருவருட்பா ஆறாம் திருமுறை அறையாத மிகுபெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்டத் துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே 3 இத்தகைய ஆன்மா உதவி கிடைத்தால் , நமக்கு வேண்டுவது ஏதுமிலை சித்தி வளாகத்தில் வள்ளலார் உரைத்தது “ எல்லார்க்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்த்ர்களால் செயப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் – இந்த இடம் – இது ஆண்டவர் கட்டளை “ இடம் : சித்தி வளாகம் – ஆன்ம நிலையம் சாதனத்தில் தவத்தில் நல்ல நிலைக்கு அனுபவத்துக்கு வந்துவிட்டனுக்கு பர உதவிகள் மிக மிக அதிகமாக இருக்கும் அவர் எதிர்பாராதது எலாம் நடக்கும் இது அசைதலுக்கும் அசைவின்மைக்கும் இருக்கும் வித்தியாசம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.