Saturday, March 7, 2026

மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம்

மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம் BG Venkatesh / March 17, 2015 மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம் இந்த நன்னாளிலே, கள்ளழகர் வெள்ளைக் குதிரையிலே ஆரோகணித்து, வைகை ஆற்றிலே இறங்கி தம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இங்கு பொதிந்துள்ள உண்மைப் பொருள் : ** வைகை ஆறு – சோம சூரியாக்கினிய கலைகள் கூடிய சுழிமுனை நாடி ** வெள்ளை குதிரை – வாசி ** கள்ளழகர் – நம் உணர்வு – ஜீவன் ** மதுரை – துவாதசாந்தமாகிய ஆன்மாவின் இருப்பிடம் அதாவது , நம் உணர்வானது ( ஜீவன் ) , வாசியுடன் கூடி , சோம சூரியாக்கினிய கலைகளுடன் சுழிமுனை நாடியில் ஏறி , பிரமரந்திரம் புகுந்து , துவாதசாந்தமாகிய மதுரை அடைவதை – கதையாக – திருவிழாவாகச் சித்தரித்துள்ளனர் நம் முன்னோர்களும் ரிஷிகளும் மொத்தத்தில் , சித்திரைத் திருனாள் என்பது ஜீவ உணர்வு ஆன்மாவுடன் சங்கமிப்பது ஆகும் நீங்கள் , மதுரை சென்று இதன் உண்மை அர்த்தம் என்னவென்று விசாரித்தால் – ஒருவர் கூட இந்த பதிலை கூற மாட்டார் – ஏனெனில் இதனை வெறும் சடங்காக – விழாவாக மட்டுமே பார்த்துப் பழகி விட்டனர். உண்மை யார்க்கும் தெரியாது – வெளியே வருவதில்லை
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.