Friday, March 13, 2026

வள்ளலாருக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன ??

வள்ளலாருக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன ?? அறிவுரை என்னெனில் ? அருளைப் பெற்று / அருட்சக்தி மூலம் மரணம் பிணி மூப்பு வென்றும் , மரணமிலாப்பெருவாழ்வும் , முத்தேக சித்தி , ஞான சித்தி என எல்லாம் அடைக என அறிவுறுத்தினாராம் அகவல் வரிகள் • அருளலா தணுவு மசைந்திடா ததனால் அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே • அருளுறி னெல்லா மாகுமீ துண்மை அருளுற முயல்கவென் றருளிய சிவமே • 491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே • 492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் தெருளிது வெனவே செப்பிய சிவமே • 493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே • 494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே • 495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே • 496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய் பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே • 497. அருளறி யார்தமை யறியார் எம்மையும் பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே • 498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே • 499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி வருள்பெற முயலுகென் றருளிய சிவமே • 500. அருளே நம்மிய லருளே நம்முரு அருளே நம்வடி வாமென்ற சிவமே • 501. அருளே நம்மடி யருளே நம்முடி அருளே நம்நடு வாமென்ற சிவமே • 502. அருளே நம்மறி வருளே நம்மனம் அருளே நங்குண மாமென்ற சிவமே • 503. அருளே நம்பதி யருளே நம்பதம் அருளே நம்மிட மாமென்ற சிவமே • 504. அருளே நந்துணை யருளே நந்தொழில் அருளே நம்விருப் பாமென்ற சிவமே • 505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி அருளே நாமறி வாயென்ற சிவமே • 506. அருளே நங்குல மருளே நம்மினம் அருளே நாமறி வாயென்ற சிவமே • 507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர் அருளே நாமறி வாயென்ற சிவமே • 508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே • 509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை அருளர சியற்றுகென் றருளிய சிவமே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.