Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்
திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே
விளக்கம் :
நந்தி தனக்கு தவத்தில் பிறவியில் செய்த மகத்தான அரும் பெரும் பர உதவிகள் உரைக்கிறார் மூலர் பெருமான்
தவத்தில் , நந்தி பின் தொடர்ந்து மேலேறினேன்
அது என்னை மூலத்தில் சேர்த்தது
பின் ஐவர் ஆம் சதாசிவர் நிலை வரைக்கும் ஏற்றியது
பின்னும் தவம் இயற்றி , ஞானம் அதன் நிலை ஆம் சுழி உச்சிக்கு ஏற்றிவிட்டது
ஆக , நந்தி அருளால் தான் ஞானம் அடைந்தேன்
நந்தி – கண்ணில் விளங்கும் நல்ல தீ
வெங்கடேஷ்
திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்
காயகல்பம்
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.
விளக்கம் :
தவத்தில் , கேசரி முத்திரையால் , அனுபவப்பயனாய் , சூரிய சந்திர கலைகளை மூலமாம் குளத்திலே சேர்த்தால் , புருவ மத்திமத்திலே சேர்த்து தவம் ஆற்றில் , எண்ணிலா கோடி யுகம் கூட வாழலாகும்
அதன் அனுபவத்தால் உடல் மயிர் கூட ஒளி வீசுமாம்
இது தான் உண்மையான காயகல்பம் செயும் முறை
சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடில் வரும் அனுபவம் உரைத்தவாறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.