Monday, March 2, 2026

திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம் நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே விளக்கம் : நந்தி தனக்கு தவத்தில் பிறவியில் செய்த மகத்தான அரும் பெரும் பர உதவிகள் உரைக்கிறார் மூலர் பெருமான் தவத்தில் , நந்தி பின் தொடர்ந்து மேலேறினேன் அது என்னை மூலத்தில் சேர்த்தது பின் ஐவர் ஆம் சதாசிவர் நிலை வரைக்கும் ஏற்றியது பின்னும் தவம் இயற்றி , ஞானம் அதன் நிலை ஆம் சுழி உச்சிக்கு ஏற்றிவிட்டது ஆக , நந்தி அருளால் தான் ஞானம் அடைந்தேன் நந்தி – கண்ணில் விளங்கும் நல்ல தீ வெங்கடேஷ்      திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம் காயகல்பம் இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. விளக்கம் : தவத்தில் , கேசரி முத்திரையால் , அனுபவப்பயனாய் , சூரிய சந்திர கலைகளை மூலமாம் குளத்திலே சேர்த்தால் , புருவ மத்திமத்திலே சேர்த்து தவம் ஆற்றில் , எண்ணிலா கோடி யுகம் கூட வாழலாகும் அதன் அனுபவத்தால் உடல் மயிர் கூட ஒளி வீசுமாம் இது தான் உண்மையான காயகல்பம் செயும் முறை சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடில் வரும் அனுபவம் உரைத்தவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.