Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
ஆரியர்
ஆரியர்
1 அகவல்
1 மந்தண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
2 சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
ஆரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
3 ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
காரியம் விளக்குமோர் காரண விளக்கே
2 திருமந்திரம் :
1 “ ஆரியன் “ நல்லன் குதிரை ரெண்டு உள
3 திருவாசகம்
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் “ ஆரியனே “
4 குறள்
அறவாழி “ அந்தணன் “ தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
இங்கு குறிக்கப்பெறும்
அந்தணர்
ஆரியன் என்பதெல்லாமே பிராமணரை /ஐயரை குறிக்கவரவிலை
தர்மம் ஆகிய ஆன்மா கடவுளைத் தான் குறிப்பிடுது என்றால் அது தவறல்ல
ஆர் தர்ம அற வழியில் நின்று வாழ்கிறாரோ ?
ஆர் மெய்ப்பொருள் சார்ந்து வாழ்க்கை வாழ்கிறாரோ ?
தவம் செய்து அகக் கனலை வளர்க்கின்றாரோ ?? அவரெல்லாமே அந்தணர் ஐயர் தான்
ஆரியர் தான்
அந்த காலத்தில் ஐயர் பிராமணர் இவ்வாறு வாழ்க்கை வாழ்ந்து வந்த தாலே , அவர் தங்களை ஐயர் ஆரியர் என அழைத்துக்கொண்டனர்
ஏன் ? ஜெர்மனி ஹிட்லர் கூட தன்னை ஆரியன் என்றே அழைத்துக்கொண்டான்
உலகத்தை அரசியல் செய்து பிழைப்பு நடத்துபவரை நம்பக்கூடாது
உலகத்துக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.