Saturday, March 14, 2026

ஞானம் / ஆன்மா பெருமை

ஞானம் / ஆன்மா பெருமை பட்டினத்தார் பாடல் – பூரண மாலை என்ன தான் கற்றாலும் என் எப்பொருளும் கற்றாலும் என் உன்னை அறியார் உய்வரோ பூரணமே ?? பட்டினத்தார் பூரண மாலை என்ற பெயரில் 100 பாடல் பாடியுள்ளார் அதில் ஆன்மாவின் பெருமை பற்றி பாடுகின்றார் ஏனெனில் பூரணம் = ஆன்மா பொருள் : உலகத்தவர் என்ன தான் கற்றிருந்தாலும் அது உலக வாழ்வுக்கு தான் – உணவு – உடை – இருப்பிடம் இதுக்கு தான் தவிர – வேறெதுக்குமில்லை அதனால் ஒரு லாபமும் இன்று – தன்னை அறியாதவரை ஒரு லாபமும் – உய்வும் இல்லை என்று உறுதிபடக் கூறுகின்றார் பட்டினத்தார் அதாவது கல்வி செல்வம் குடும்பம் எல்லாம் துறந்தால் தான் ஞானம் அடைய முடியும் என்றவாறு ஏனெனில் இதெலாம் உடையது ஆன்மா ஞானம் அப்போது இந்த பொருள் எல்லாம் கற்று சம்பாதிப்பது எல்லாம் வீண் தானே ஆகையால் நம் வாழ்வு தவத்தில் ஆன்ம ஞானம் அடைவதில் கழிந்து போனால் அது மிக சிற்ப்பானது ஆன்மாவை அறிந்து கொண்டால் , இந்த உலக வாழ்வு தேவைப்படாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.