Sunday, March 8, 2026

சன்மார்க்க சாதனம் – கண் திருவடி தவமும் – இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலையும்

BG Venkatesh / August 29, 2018 சன்மார்க்க சாதனம் – கண் திருவடி தவமும் – இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலையும் நான் கண் பாதி திறந்து – பாதி மூடி செயும் தவம் யார் யார் செய்திருக்கிறார்கள் என பெரிய பட்டியல் போட்டுக்காண்பித்து விட்டேன் அதில் 1 வள்ளலார் 2 ஜைனத் துறவி – மகாவீரர் 3 ஷீரடி சாய்பாபா 4 ஸ்ரீ ராம கிருஷ்ணப் பரம் ஹம்சர் 5 காரைசித்தர் – மற்ற எல்லா சித்தர் பெருமக்களும் 6 ஞானி – மகா கவி பாரதியார் – 7 ஜக்கி வாசுதேவ் – ஈஷா யோக மைய நிறுவனர் 8 ஆதி யோகி சிலை இது தான் உண்மையான முறையும் வழியும் ஆம் அப்படியெனில் இந்த முறை கற்றுத்தராத 1 மனவளக்கலை 2 வாழும் கலை 4 பூரண சித்தி யோகம் – தி மலை குழு 5 குமரி செல்வராஜ் குழு ( இது பாதி கிணறு தாண்டிய குழு ) 6 வாசி யோகம் இந்த யோகா மையங்களில் மக்கள் சென்று யோகம் கற்பது வீண் ஆகும் இவர்கள் நமக்கு சூரிய ஒளி வேண்டுமெனில் அவர்கள் காட்டுவது மெழுகுவர்த்தி்ஒளி ஆம் இம்முறை உண்மையும் அல்ல இவர்கள் நமக்கு கற்பிப்பது பால பாடம் ஆம் ஆனால் கண்மணி கண் திருவடி தவம் என்பது ஐஐடி யில் படிப்பதுக்கு சமம் ஆகும் – அது முனைவர் பட்டம் படிப்பதுக்கு சமம் ஆம் இந்த கண் தவம் செய்தவர்கள் அடைந்த நிலைகள் – இறுதி பதங்கள் 1 சிலர் மரணம் – ஷீரடி பாபா 2 சிலர் சமாதி – சித்தர் பெருமக்கள் இவர்கள் அஷ்டமா சித்தி பெற்றிருந்தனர் என்பது உண்மை 3 சிலர் – முத்தேக சித்தி – மரணமிலாப்பெருவாழ்வு – சிற்றம்பலப்பிரவேசம் அடைந்துள்ளனர் சிவவாக்கியர் – வள்ளல் பெருமான் இவர்களிலே இம்மாதிரி வேறு நிலை – இறுதி அடைந்தனர் எனில் ? இதை எல்லாம் ஒன்றும் செய்யாமல் -” ஜீவகாருண்யம் – தயவு – பரோபகாரம் ஸ்த்விசாரம் – ” என்று அன்னதானம் செய்து கொண்டிருப்பவர் நிலை – இறுதி முடிவு என்னவாக இருக்கும் என நான் சொல்ல வேண்டுவதிலை அதனால் சன்மார்க்க சங்கத்தார் – உலகம் தங்கள் பொன்னான நேரத்தை வீண்டிக்காமல் – சாதனத்தில் அதுவும் கண் தவம் செய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் பின்னர் அது அவரவர் விருப்பம் ஆம் சொல்வது என் கடமை – நான் முடித்திருக்கிறேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.