Tuesday, March 3, 2026

பிரம்மாஸ்திரம் – சன்மார்க்க விளக்கம்

பிரம்மாஸ்திரம் – சன்மார்க்க விளக்கம் பிரம்மாஸ்திரம் = ஆன்ம ஒளி என்று பொருள் பிரம்மாஸ்திரம் – இதனை விக்னானிகள் ( scientists ) அணு ஆயுதம் என்றே விளக்கி வருகின்றனர் ஆன்மாவும் அணு தான் இந்த அஸ்திரத்தைக் கொண்டு தான் ஸ்ரீ ராமன் இராவணனை வதம் செய்தான் என்பது இதிகாசம் இதன் பொருள் யாதெனில் – ஸ்ரீ ராமன் ( ஜீவன் ) ஆன்ம ஒளியை வீசச் செய்து மனதையும் அதன் மலங்களையும் திரைகளையும் வென்றான்/கொன்றான் என்பது தான் இது நடைபெறும் இடம் சுழிமுனை உச்சி ஆகும் வெங்கடேஷ் “ கொள்ளி – சன்மார்க்க விளக்கம் “ பிணத்துக்கு இதை வைத்து மகன் தகனம் செய்வான் சரி இதுக்கு ஏன் இந்தப் பேர் ?? இந்த சடங்கு ?? கொள்ளி எனில் முத்தீ / விந்து சுத்த உஷ்ணம் அதாவது இதை வைத்து எரித்துவிட்டால் , இறந்தவரின் மும்மலமும் நீங்கி ஞானம் அடைந்துவிட்டதாக உலகுக்கு காட்டுவதுக்காக இந்த சடங்கு உண்மையில் இந்த அரும்பெரும் நிலை / அனுபவத்தை அவர் அடையவிலை எனினும் – இந்த மாதிரி நடந்தால் , ஒருவர்க்கு மும்மலமும் நீங்கி ஞானம் அடைவர் என்ற மாபெரும் உண்மை உலகுக்கு உணர்த்தவே இந்த சடங்கு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.