Friday, March 6, 2026

வாக்கு பெருமை

வாக்கு பெருமை கோபம் வந்தால் அதை வெளிப்படுத்திவிடுதல் நலம் வீட்டிலும் வேலையிலும் சரி மனைவியிடத்திலும் நம் உயர் அதிகாரியிடத்தும் அப்படி செய்யாமல் அடக்கி வைத்திருந்தால் அது பின்னர் எரிமலை ஆக வெடிப்பது உலகறிந்த விஷயம் இதை நிரூபிப்பது தான் இந்த பதிவு 96 தத்துவங்களில் 36 தத்துவம் 60 தாத்வீகம் இந்த 60 ல் தான் வாக்கு இது பத்தி எனக்கு அவ்வளவாக அறிவு இல்லாதிருந்தது அதை சரி செய்துவிட்டது இயற்கை வாக்கு – 4 வகை என்பர் ஞானியர் வைகரி - வாய் திறந்து கூறுதல் மந்திரம் உட்பட மத்திமை - வாய் திறக்காமல் மனதால் உரைப்பது - 108 தடவை வைகரிவிட சத்தி வாய்ந்தது பைசந்தி - எழுதியதை பார்த்து உச்சரித்தல் மெதுவாக - 11664 தடவை மத்திமை விட சத்தி வாய்ந்தது சூக்குமை - மனதாலும் உரைக்காமல் அப்படியே அடக்கு வைத்தல் – 12 , 59 , 712 தடவை பைசந்தி விட சத்தி வாய்ந்தது இதை கணித்தவர் நம் ஞானியர் - கணித மேதைகள் அல்லர் அதனால் தான் அடக்கி வைக்கப்பட்டது எரிமலை என வெடித்து சிதறிவிடுது ஒரு கால கட்டத்தில் அதனால் நம் இன்பம் துன்பம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி மனதை லேசாக்கி விட வேணும் மரணத்தின் போது அழுதுவிடுதல் நலம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.