Friday, March 6, 2026

திருவாசகமும் திருவருட்பாவும் “

திருவாசகமும் திருவருட்பாவும் “ ஞானியர் உலகமயம் 1 திருவாசகம் அதிசயப்பத்து முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் அதாவது நமசிவய ஆகிய பஞ்சாக்கரத்தின் நிறங்கள் விளக்குவது ஆகும் முத்து - வெண்மை மாமணி - நீலம் மாணிக்கம் - செம்மை பவளம் - ஆரஞ்சு நிற இளஞ்சிவப்பு வைரம் இது தான் ஓங்காரமாகிய பிரணவத்தின் அடிப்படையான விஷயம் 2 அருட்பா ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் • ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் என்னென்று சொல்வன டி - அம்மா என்னென்று சொல்வன டி. ஆணி ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி பாரோர் நிலையில் கருநீலம் செய்ய பவளம தாச்சுத டி - அம்மா பவளம தாச்சுத டி. ஆணி மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம் மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப் பேர்மணி ஆச்சுத டி - அம்மா பேர்மணி ஆச்சுத டி. ஆணி வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள் வெண்மணி ஆச்சுத டி - அம்மா வெண்மணி ஆச்சுத டி. ஆணி ஞானிகள் ஒரே கருத்துடையோர் ஆவர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.