அழுகணி சித்தர் பாடல் - 7
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே
பொருள் :
மூக்கடி = புருவ மத்தி
கண் மூக்கு காது எல்லாமும் உள் சேரும் இடம் தான் மூக்கடி
உண்ணாக்கு மேலே பிரம துவாரத்தில் இருக்கும் ஆன்மப்பதுமை -அவளிடத்தில் புதுமைகள் உண்டு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.